தீபம்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் சிறிலங்காவும் நிலவில் கால் பதித்திருக்கும்! | தீபச்செல்வன்

 நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற புகழை இந்தியா பதிவாக்கியிருக்கிறது. நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய தகவல் உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறது.

இந்திய விண்வெளிப் பயணத்தின் புதிய மைல் கல்லாக இச் சாதனை அமையப் பெற்றிருக்கிறது.

‘இந்தியா நிலவில் உள்ளது’ என்ற சிறப்பை இஸ்ரோ தலைவர் தேசப் பெருமையுடன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் சிறிலங்கா நிலவில் கால் பதிக்குமா? என்ற கேள்வி இலங்கை சமூக வலைத் தளங்களில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.

சிறிலங்கா நிலவில் கால் பதிக்குமா?

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் சிறிலங்காவும் நிலவில் கால் பதித்திருக்கும்! | Chandrayaan 3 Sri Lanka On The Moon If There Ltte

இந்த இடத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆசியப் பிராந்தியம் தொடர்பிலும் அதில் சிறிலங்கா தொடர்பிலும் முன் வைத்த கருத்துக்கள் முக்கியமாக நினைவுபடுத்த வேண்டியவை ஆகின்றன.

இருப்தோராம் நூற்றாண்டு ஆசியாவின் சகாப்தமாக அமையும் என்றும் எமது பிராந்திய நாடுகள் அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகள் என்று புதிய பாதையிலே பயணிக்கின்றன என்றும் மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும், தீராத வியாதிகளுக்கு தீர்வுகள் தேடவும் புதிய பயணத்தில் இறங்கியிருப்பதாகவும் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க

https://ibctamil.com/article/chandrayaan-3-sri-lanka-on-the-moon-if-there-ltte-1692958521 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இணையுங்கள்