செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
திங்கள், 3 ஜூலை, 2023
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.
கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.
2008இல் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை என்ற கவிதை நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நிலையில் தற்போது இவரது 20ஆவது புத்தகமான பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல என்ற நூலை ஜீவநதி பதிப்பித்துள்ளார்.
இவ்வாறு எழுத்துச் சாதனையை தொடரும் தீபச்செல்வனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுவரையில் எழுதிய புத்தகங்கள்
01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008
02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
உயிர்மை பதிப்பகம், சென்னை, 2009
03. பாழ் நகரத்தின் பொழுது
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010
04. ஈழம் மக்களின் கனவு
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010
05. பெருநிலம்
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011
06. ஈழம் போர்நிலம்
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011
07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு
ஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011
08. கூடார நிழல்
உயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012
09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்
எழுநா வெளியீடு, 2013
10. எதற்கு ஈழம்?
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013
11. PRAY FOR MY LAND
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013
12. எனது குழந்தை பயங்கரவாதி
விடியல், தமிழ்நாடு, 2014
13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது?
உயிர்மை, தமிழ்நாடு, 2014
14. பேரினவாதத் தீ
யாவரும் பதிப்பகம், 2016
15. தமிழர் பூமி
எதிர் வெளியீடு, 2017
16. நடுகல்
டிஸ்கவரி புக் பேலஸ், 2018
17. நான் ஸ்ரீலங்கன் இல்லை
யாவரும் பப்ளிசர்ஸ், 2020
18. ‘ஸ்மாரக்க ஷிலாவத்த (நடுகல் சிங்கள மொழியாக்கம்)
கடுல்ல பதிப்பகம், 2021
19. ‘பயங்கரவாதி
டிஸ்கவரி புக் பேலஸ், 2022
20. ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
ஜீவநதி பதிப்பகம், 2023
நன்றி - வணக்கம் லண்டன்
வெள்ளி, 30 ஜூன், 2023
பெட்னா 36ஆவது விழாவுக்கு வாழ்த்துகள்
பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்ற நிலையில், உலகத் தமிழ் மக்களின் பல்வேறு பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் இந்த பெட்னாவின் வருடாந்த விழா, ஒடுக்கப்பட்ட ஈழத்து மக்களின் உரிமைகளையும் வாழ்வு நிலைகளையும் பேச ஒருபோதும் தவறுவதில்லை. இம்முறையும்கூட உலகத் தமிழ் அரங்கத்தில் ஈழத் தமிழர் விவகாரம் பேசுபொருள் ஆகிறது.
என் எழுத்துப் பயணத்தில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்ட வட அமெரிக்க தமிழ் சங்கம், கடந்த காலத்தில் மெய்நிகர் வழியாக என் எழுத்துக்கள் குறித்த கவனம் மிக்க உரையாடல்களையும் நிகழ்த்தியிருந்தது. தமிழின் தொன்மையை வலியுறுத்தும் தொனியில் இடம்பெறும் இந்த ஆண்டு விழாவில் ஈழத்தின் தொன்மை முகமும் மிளிரும்.
உறவுகளுக்கு பேரன்பு மிகு வாழ்த்துகள்
Federation of Tamil Sangams of North America - FeTNA
சனி, 24 ஜூன், 2023
லண்டனில் இன்று தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
திங்கள், 19 ஜூன், 2023
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முன்மாதிரி
ஈழ தாகத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் பேசுவதனால் நான் மாத்திரமின்றி என் படைப்புக்களும் ஒடுக்கப்படுகிற சூழலில், சமானியர்கள் தரும் வரவேற்பும் கொண்டாடுதலும்தான் என்னை உயிர்ப்போடும் உந்துதலோடும் வழி நீளச் செய்கிறது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற மாணவர் தன் பிறந்த தினத்தை முன்னிட்டு தன் சொந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள தேறாங்கண்டல் பாடசாலைக்கு தன் சக மாணவர்களை அழைத்துச் சென்று 'பயங்கரவாதி', 'நடுகல்' முதலிய நாவல்கள் மற்றும் 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' கவிதை தொகுதியின் பிரதிகளையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.
அர்த்தச் செறிவான உரையாடல்களும் குழந்தைகளை விழிப்பூட்டும் முன் மாதிரியான செயல்களுமாய் இன்றைய நாளை வரலாறு ஆக்கி அசத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந் நிகழ்வுக்கு அனுமதியளித்த பள்ளிக்கும் என் அன்பும் நன்றியும். .
செவ்வாய், 6 ஜூன், 2023
பயங்கரவாதி | காவலூர் அகிலன் விமர்சனம்
எமது நிலம் அதில் வாழ்ந்த மக்கள் அது கண்ட வெற்றிகள் என எழுதித்தீர்த்திருக்கிறார் எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் இது அவரது இரண்டாவது நாவலாகும் இதற்கு முன்பு நடுகல் என்ற நாவலை எழுதியிருந்தார் அதுவும் எம் ஈழம் சார்ந்ததாகவே வந்திருந்தது.
அதிலிருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமானதாகவும் உண்மையில் நாம் கண்டு அனுபவிச்ச சம்பவங்களையும் எழுதியிருக்கிறார்.
இந் நாவலில் ஒவ்வொரு பகுதியிலும் மாறனாக வரும் பாத்திரமாகட்டும் துருவன்,சுதர்சன்,மலரினி,செந்தாளன்,ஏனைய கதாபாத்திரங்களாகட்டும் அத்தனைபேரினது பாத்திரங்களாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்றே சொல்லலாம் உண்மையில் போராட்ட காலத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார் அதை விட அக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட அவஸ்தைகளைக் எழுதியிருக்கிறார் ஒவ்வொரு அத்தியாயங்களைக் கடக்கும் போதும் அங்கு நான் இருப்பது போலான தொற்றமே என் மனதில் நிலைத்திற்று .
கடைசிப் பக்கம் பார்க்கும் வரையில் அந்த நாவலில் இருக்கும் கதையை எங்களுடைய கதையாகவே பார்க்கத் தோன்றியது இத்தனை காலமும் சொல்லப்படாத கதைகளை எழுதப்படாத கதைகளைக் கூறியிருக்கிறார் அண்ணன்.
எங்காவது பயங்கரவாதியாக யாரோ ஒருவரின் கதை தென்படும் என பார்த்துக்கொண்டே போனேன் ஆனால் அவர்கள் பார்வையில் நாங்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்தான் என்பதை சொல்லி முடித்திருக்கிறார் இந்த நாவல் ஊடாக உண்மையில் இதை நாவலாக பார்த்துவிட்டுக் கடந்துபோக முடியாது இது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் அனுபவித்த துயர்கள் என்பதுவே உண்மை .
நடுகல் நாவலை மூன்று இரவுகளில் வாசித்து முடித்திருந்தேன் ஆனால் பயங்கரவாதியை இரவு பகல் வேலைத்தளம் என வாசித்திருக்கிறேன் .
தீபச்செல்வன் அண்ணா எழுதும்போது இவ்வளவு கதைகளை இதற்குள் கொண்டுவருவேன் என எண்ணினாரோ தெரியவில்லை ஆனால் அழகாகவும் சிறப்பாகவும் கதைகளைக் கூறிமுடித்திருக்கிறார் அதுவும் உண்மைக் கதைகளை .
52 பகுதிகளையும் 319 பக்கங்களையும் கொண்ட இந்நாவல் எம் ஈழத்துப் படைப்பின் பெரும் படைப்பாக இருக்கும் .
நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.
காவலூர் அகிலன்.
திங்கள், 5 ஜூன், 2023
லண்டனில் பயங்கரவாதி
பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் 'பயங்கரவாதி' நாவலின் அறிமுக நிகழ்வு இந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் 'தூவானம்' ஈழத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிடலின் போது லண்டனில் 'பயங்கரவாதி;' நாவல் அறிமுக நிகழ்வு குறித்த அழைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
விலைபோன கவிஞன் | தீபச்செல்வன் கவிதை
எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்
துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்
நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு ஏற்பவும் அவன் சொல்லவும் கூடும்
கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?
கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
எதிரிகளுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்
சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
ஜீவநதி 2014
வெள்ளி, 2 ஜூன், 2023
கதைசொல்லவா? நிகழ்வில் 'யாழ் சுமந்த சிறுவன்'
புலக்கண் யூடியூப் அலைவரிசையில் கதைசொல்லவா நிகழ்வில் தீபச்செல்வனின் யாழ் சுமந்த சிறுவன் கதை இடம்பெற்றுள்ளது. ஈழ எழுத்தாளர் எறிகணை நாவல் ஆசிரியர் தியா காண்டீபன் இக் கதையினை சொல்லியுள்ளார்.
புதன், 31 மே, 2023
இந்துவில் வெளியான கட்டுரை
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இருந்து கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிவிப்பு வரையாக ஈழ மக்களின் உணர்வகளையும் மீட்சிகளையும் பற்றிய கட்டுரை இன்று இந்து நாளிதழில் வெளியானது.
தமிழ்நாட்டில் இருந்து அரசியல் பிரமுகர்கள். படைப்பாளிகளின் அழைப்புகள் மற்றும் வாசக உறவுகளின் கடிதங்கள் என்று இன்றைய நாளே உற்சாகம் தந்தது. நீதிக்கான பயணம் நோக்கி தொடர்ந்தும் பயணிப்போம்.https://www.hindutamil.in/news/opinion/columns/999270-sri-lankan-genocide.html
வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
இணைப்புக்கள்
- மாற்றுப்பிரதி
- வா. மணிகண்டன்
- ஹரிகரசர்மா
- தானா.விஷ்ணு
- மைதிலி
- பெண்ணியம்
- நிலாரசிகன்
- கடற்கரய்
- த. அஜந்தகுமார்
- லீனா மணிமேகலை
- எச்.பீர்முஹம்மது
- தேவஅபிரா
- ஸ்மைல் வித்யா
- குட்டி ரேவதி
- பெருந்தேவி
- இரயாகரன்
- ப.வி.ஸ்ரீரங்கன்
- டிசே தமிழன்
- நிவேதா
- மற்றவர்கள்
- ஷோபாசக்தி
- துவாரகன்
- கருணாகரன்
- ஃபஹீமாஜஹான்
- தமிழ்நதி
- சித்தாந்தன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- புதுவைஇரத்தினதுரை
- சுகுமாரன்
- தியா
வலைப்பதிவு பட்டியல்
-
காணமல் போன பூனைக்குட்டி5 ஆண்டுகள் முன்பு
-
Die Kurdischen Berge7 ஆண்டுகள் முன்பு
-
குர்து மலைகள்7 ஆண்டுகள் முன்பு
-
பலி நகரத்தின் இரவுகள்14 ஆண்டுகள் முன்பு
-
தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு14 ஆண்டுகள் முன்பு
-
-
சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி15 ஆண்டுகள் முன்பு
-
திருப்பிக் கொடுத்த சைக்கிள்16 ஆண்டுகள் முன்பு
-