Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

Mitt barn: Terrorist/எனது குழந்தை பயங்கரவாதி /நோர்வேஜியன் மொழியாக்கம்


Da de nevnte at fred blomstrer fra våpnene sine
Unnlot jeg å spørre hva fred er

Da de påstod at trygghet sprer seg fra øynene sine
Stilte jeg ikke spørsmål om hvordan trygghet føles

Da de nektet for okkupasjon av vårt land
Spurte jeg ikke om de tvangsbygget Bhuddastatuer og militærbaser i vår jord

Da de sa at alle statsborgere tilhører dette landet
Spurte jeg ikke om hvordan de ville ha behandlet sine søsken
 
Da de hevdet at ingen hadde forsvunnet
Spurte jeg ikke hvor det har blitt av alle som overga seg
 
Da de fastslo at ingen kvinner ble voldtatt
Og ingen av våre menn ble kledd nakne og skutt i bakhodet
Spurte jeg ikke hvordan det oppstod blodbad på vår jord
 
Da de hevdet at ingen sivile ble drept
Og alle de drepte var terrorister
Sa jeg : «Mitt barn er en terrorist»

Dikt (Tamil):Theepachelvan
Oversatt til Norsk: Rooban Sivarajah

புதன், 26 அக்டோபர், 2016

கனவு உப்பிய நெஞ்சறை




ஒரு சோடி பட்டாம் பூச்சிகள்
திரும்பாத திசையிற்
சன்னம் தைத்துக் கிடந்தது
கனவு உப்பிய நெஞ்சறை.

உயிருக்கு மதிப்பற்ற நகரில்
சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும்
நசிந்தொட்டிய வெற்றுடல்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல
சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல
கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை.

குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன
உருளும் பந்துகளும்
சில்லுடைந்த மோட்டார் வண்டிகளும்.

துவட்டி வளர்த்த பிள்ளையின் தலையை
சுவருடன் அடித்துப் பிளந்தவர்கள்
தாயிடம் உயிருக்கு ஈடுபேசினர்
ஒரு சவப்பெட்டியை தருவதாய்

கல்லிருக்கையில் விரிந்து பறக்கும்
அப்பியாசப் புத்தங்கள்போல்
படபடக்கும் இவ் நகரம்
துப்பாக்கிகளுக்கே பரிசளிக்கப்பட்டது.

போர் சக்கரத்தில் தப்பிய பிள்ளையை
நசித்தது யானை

காலம்தோறும்
கழுத்துக்களை திருகும் சீருடைகளே வேறுவேறு
துப்பாக்கிகளும் சிந்தப்பட்ட குருதியும் ஒன்றுதான்.
0

தீபச்செல்வன்

ஓவியம் - வசந்தரூபன்
நன்றி - குளோபல் தமிழ்ச் செய்திகள்

சனி, 22 அக்டோபர், 2016

பூக்கும் பறவை

 

சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்கும்
தேசத்தில் செண்பகப் பறவைகள் வந்து
பூவரச மரங்களில் அமரும்

காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன

மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்

சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
பறவையைப்போலான
எனது அழகிய தேசம் பூக்கும்.

2012

நன்றி - சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர்
தொகுப்பு - எனது குழந்தை பயங்கரவாதி

புதன், 12 அக்டோபர், 2016

Mon enfant était un terroriste/ பிரஞ்சு மொழியாக்கம்/ எனது குழந்தை பயங்கரவாதி/ வாசுதேவன்


Lorsqu'il a déclaré que la paix fleurissait de leurs fusils,
Je ne lui ai pas demandé comment serait la paix,

Lorsqu'il a déclaré que la sécurité émanait de leurs yeux,
Je ne lui ai pas demandé comment la sentir,

Lorsqu'il a nié d'avoir occupé nos terres,
Je ne l'ai pas interrogé sur les camps militaires et les temples bouddhistes,

Lorsqu'il m'a déclaré que nous étions tous des citoyens du même pays,
Je ne lui ai pas demandé comment il se comportait avec les concitoyens,

Lorsqu'il m'a dit que personne n'était porté disparu,
je ne lui ai pas demandé où sont ceux qui s'étaient rendus,

Lorsqu'il a déclaré qu'aucune de nos femmes n'a été violée et tuée,
Qu’aucun de nos jeunes n'a été fusillé dans la nuque, les mains attachées par derrière,
Je ne lui ai pas demandé comment le sang a inondé notre sol.

Lorsqu'il a déclaré qu'ils n'ont tué personne
Et que tous ceux qui étaient tués étaient des terroristes,
Je lui ai dit que mon enfant était un terroriste

Auteur : Theepachelvan
Traduction : K. Vasudevan


வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...