Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 28 நவம்பர், 2016

ஒரு கெரில்லாவின் இறுதிக் கணம்



வரிகளில் தேசக் கனவை எழுதிய
சீருடைகளை அணிந்தனர்
நேற்றைய போரில் மாண்டுபோனவர்
கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து
அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்

எல்லோருடைய அழுகையையும்
துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும்

எல்லோருடைய துயரையும்
துடைக்கும் அவர்களால்தான்
இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும்

கழுத்தில் சைனைட் குப்பி
தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை
துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன
தோழியின் நினைவில் மறந்தாள்
களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை

துப்பாக்கியை ஏந்திக்
கையசைக்கும் விழிகளில் தேசத்தின் வரைபடம்
நேற்றைய போரில்
கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவில் மறந்தான்
தந்தையைத் தேடி அழும் தன் குழந்தையை.

'நாளை மீட்கப்படும் கிராமத்தில்
நான் இல்லாது போகலாம்
அம்மாவின் பொழுது சொந்தவூரில் புலர்கையில்
சாணி தெளித்த முற்றத்தில்
செவ்வரத்தம் பூவாய் பூத்திருப்பேன்'.

முதுகுப் பொதிக்குள்
உலர்ந்துபோன உணவுப் பொட்டலம்
ஒரு குவளை குடிநீர்
பெருந் தாகத்தில் ஊடறுக்கும்
கெரில்லாவின் இறுதிக் கணத்தில்
மனமெங்கும் பரவிக் கிடந்தது
கனவு பூத்த தாய் மண்.
¤

தீபச்செல்வன்

கார்த்திகை 2016

புதன், 23 நவம்பர், 2016

கூப்ரூ மலையின் மகள்


மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே


யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்

 -தீபச்செல்வன்

இரோம் சர்மிலாவுக்கு

நன்றி - குமுதம்

புதன், 2 நவம்பர், 2016

அமைதித் தளபதி


அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்

தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்

முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்
சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான
முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள்

நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்க்கு
கைலாகு கொடுத்து
விரிந்த மலர்கொத்துக்களைபோல்
புன்னகையை நீட்டியவனின் உதடுகளை
மூடிக் கிடந்தது ஈரமண்

முள்முருக்கில் அமர்ந்திருந்த
வெண்புறா எழுந்து பறந்தது
கொடும் சிங்கத்தின் முகத்துடன்
இறகுகள் முறிக்கப்பட்ட புலுனி வீழ்ந்தது
நாவல் மரத்திலிருந்து

அமைதித் தாகத்தின்
புன்னகையடர்ந்த அவன் முகத்தின்
ஒரு துளி மௌனத்தில்
தோற்கும் உம் அறம் பிழைத்த போர்.

-தீபச்செல்வன்

02.11.2007. சமாதானப் போராளியாக உலகறிந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஸ்ரீலங்கை அரச படைகளின் விமானத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். 

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

Mitt barn: Terrorist/எனது குழந்தை பயங்கரவாதி /நோர்வேஜியன் மொழியாக்கம்


Da de nevnte at fred blomstrer fra våpnene sine
Unnlot jeg å spørre hva fred er

Da de påstod at trygghet sprer seg fra øynene sine
Stilte jeg ikke spørsmål om hvordan trygghet føles

Da de nektet for okkupasjon av vårt land
Spurte jeg ikke om de tvangsbygget Bhuddastatuer og militærbaser i vår jord

Da de sa at alle statsborgere tilhører dette landet
Spurte jeg ikke om hvordan de ville ha behandlet sine søsken
 
Da de hevdet at ingen hadde forsvunnet
Spurte jeg ikke hvor det har blitt av alle som overga seg
 
Da de fastslo at ingen kvinner ble voldtatt
Og ingen av våre menn ble kledd nakne og skutt i bakhodet
Spurte jeg ikke hvordan det oppstod blodbad på vår jord
 
Da de hevdet at ingen sivile ble drept
Og alle de drepte var terrorister
Sa jeg : «Mitt barn er en terrorist»

Dikt (Tamil):Theepachelvan
Oversatt til Norsk: Rooban Sivarajah

புதன், 26 அக்டோபர், 2016

கனவு உப்பிய நெஞ்சறை




ஒரு சோடி பட்டாம் பூச்சிகள்
திரும்பாத திசையிற்
சன்னம் தைத்துக் கிடந்தது
கனவு உப்பிய நெஞ்சறை.

உயிருக்கு மதிப்பற்ற நகரில்
சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும்
நசிந்தொட்டிய வெற்றுடல்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல
சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல
கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை.

குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன
உருளும் பந்துகளும்
சில்லுடைந்த மோட்டார் வண்டிகளும்.

துவட்டி வளர்த்த பிள்ளையின் தலையை
சுவருடன் அடித்துப் பிளந்தவர்கள்
தாயிடம் உயிருக்கு ஈடுபேசினர்
ஒரு சவப்பெட்டியை தருவதாய்

கல்லிருக்கையில் விரிந்து பறக்கும்
அப்பியாசப் புத்தங்கள்போல்
படபடக்கும் இவ் நகரம்
துப்பாக்கிகளுக்கே பரிசளிக்கப்பட்டது.

போர் சக்கரத்தில் தப்பிய பிள்ளையை
நசித்தது யானை

காலம்தோறும்
கழுத்துக்களை திருகும் சீருடைகளே வேறுவேறு
துப்பாக்கிகளும் சிந்தப்பட்ட குருதியும் ஒன்றுதான்.
0

தீபச்செல்வன்

ஓவியம் - வசந்தரூபன்
நன்றி - குளோபல் தமிழ்ச் செய்திகள்

சனி, 22 அக்டோபர், 2016

பூக்கும் பறவை

 

சிறகடிக்கும் அழிவற்ற பறவை
மலர்ச்சி மிகுந்த வீழ்ச்சியற்ற பூ
தகிக்கும் நிலமும் கொதிக்கும் கடலும்
வீரம் பூத்த காடுகளுமாகி செழித்திருக்கும்
தேசத்தில் செண்பகப் பறவைகள் வந்து
பூவரச மரங்களில் அமரும்

காயம் பட்ட குழந்தைகளின்
இரத்தம் படிந்த முகங்களில்
பூக்களின் ஆசைகள் பூக்கின்றன

மஞ்சளும் சிவப்புமாக நிலம் பூக்கும்

சருகளுக்குள்ளிருந்து நேராக
முளைத்தெழும்பும் செடிபோல
சாம்பலுக்குள் அணையாது
புகைத்தெழும்பும் நெருப்புப்போல
அழியாது எப்பொழுதுமிருக்கும்
பறவையைப்போலான
எனது அழகிய தேசம் பூக்கும்.

2012

நன்றி - சமூகநீதித் தமிழ்த் தேசம் செப்டம்பர்
தொகுப்பு - எனது குழந்தை பயங்கரவாதி

புதன், 12 அக்டோபர், 2016

Mon enfant était un terroriste/ பிரஞ்சு மொழியாக்கம்/ எனது குழந்தை பயங்கரவாதி/ வாசுதேவன்


Lorsqu'il a déclaré que la paix fleurissait de leurs fusils,
Je ne lui ai pas demandé comment serait la paix,

Lorsqu'il a déclaré que la sécurité émanait de leurs yeux,
Je ne lui ai pas demandé comment la sentir,

Lorsqu'il a nié d'avoir occupé nos terres,
Je ne l'ai pas interrogé sur les camps militaires et les temples bouddhistes,

Lorsqu'il m'a déclaré que nous étions tous des citoyens du même pays,
Je ne lui ai pas demandé comment il se comportait avec les concitoyens,

Lorsqu'il m'a dit que personne n'était porté disparu,
je ne lui ai pas demandé où sont ceux qui s'étaient rendus,

Lorsqu'il a déclaré qu'aucune de nos femmes n'a été violée et tuée,
Qu’aucun de nos jeunes n'a été fusillé dans la nuque, les mains attachées par derrière,
Je ne lui ai pas demandé comment le sang a inondé notre sol.

Lorsqu'il a déclaré qu'ils n'ont tué personne
Et que tous ceux qui étaient tués étaient des terroristes,
Je lui ai dit que mon enfant était un terroriste

Auteur : Theepachelvan
Traduction : K. Vasudevan


வியாழன், 29 செப்டம்பர், 2016

நீர்ப்பறவையின் கேலிக் கோடு




மீன்களை தரையில் எறிவதைப்போல
தொலைதூரம் வீசியெறிந்து
உன்னையும் நாம்தான் கொன்றோம்

புலத்தில் தந்தையர்
நிலத்தில் குழந்தையர்
வழிகளில்
ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும்
காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும்

கீவ் நகரை கடந்தவனைக் காணாது
ஊசியிலை காடுகளும் துடித்தன
போலாந்து எல்லையில்
வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர்
துயரப்பிக் கிடக்கின்றன
உன் கேலியின் கோடுகள்

கூடுகள் பறிபோயிருக்கலாம்
இரையற்று பசியில் மரிக்கலாம்
எல்லாப் பறவைகளும்
வலசைகளாயிருப்பதில்லை

ஆழ்கடலில் குழந்தைகளை
சுமந்தபடி அலைந்து
புகலிடம் நெருங்காது திரும்பிய
சிறு படகைப்போல

தன் தாய் மண்ணிலிருந்து
தூக்கி எறியப்பட்ட
புலம்பெயரா முக்குளிப்பான் பறவை*
உயிர் நீத்தது
உக்ரைன் காட்டில்.

இரைக்காய் காத்திருக்கும்
உன் குஞ்சின் கண்ணீரில் நனையும்
வறண்டுபோன உன்னுடல்.

அஸ்வின் சுதர்சனுக்கு

தீபச்செல்வன்

*முக்குளிப்பான் பறவை புலம்பெயராத நீர்ப் பறவையினம்

நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 21 செப்டம்பர், 2016

Mein Kind ist ein Terrorist/ எனது குழந்தை பயங்கரவாதி/ யேர்மனிய மொழியாக்கம்





Ich fragte nicht
wie der Frieden aussehen könnte,
als er mir sagte,
„der Frieden blühe aus ihren Gewehren“.

Ich fragte nicht
wie die Sicherheit aussehen könnte,
als er mir sagte,
„aus ihren Augen könne man die sie erblicken“.

Ich fragte nicht
wie die Militärlager und Buddhastatuen aussehen könnten,
als er sagte,
dass sie in unser Land nicht zu besetzen hätten.

Ich fragte nicht
wie er seine Brüder behandeln sollte,
als er sagte,
dass wir alle Bürger eines Landes sind.

Ich fragte nicht
wohin die Gefangenen verschwunden sind,
als er sagte,
dass niemand vermisst wurde.

Ich fragte nicht
wie das Blut auf den Boden kam,
als er sagte,
„keine unserer Frauen wurde vergewaltigt und getötet,
keine Jugendlichen wurden nackt in eine Reihe gestellt
und keinem wurde in den Hinterkopf geschossen“.

Als er sagte,
dass er noch nie jemanden umgebracht hätte,
lediglich nur Terroristen,
da habe ich ihm gesagt,
„mein Kind ist ein Terrorist “.
0

Poem - Theepachelvan

translation - sugirtha shanmuganathan


Der zeitgenössische Dichter Theepachelvan ist eine bekannte Persönlichkeit der Tamilischen Literatur. Das Gedicht „Mein Kind ist ein Terrorist“ ist sein berühmtestes Werk und wird seit der Veröffentlichung rege diskutiert. Übersetzt wurde es von Sugirtha Shanmuganathan, eine in der Schweiz lebende Tamilin.


குறிப்பு 'எனது குழந்தை பயங்கரவாதி' கவிதையை ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு, தற்போது புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் சுகிர்தா சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நான் பேசுவேன்


எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்

துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்

நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு  ஏற்பவும் சிலர் சொல்லவும் கூடும்

கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?

கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
அவர்களுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்

சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
தீபச்செல்வன்

ஜீவநதி 2014

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

திரும்ப முடியாத நகரம்


¤

என் நகரத்தின் கடைசி தருணம்
அதுவென நினைத்திருக்கவில்லை
உன்னை முத்திமிடுகிறபோது
அது கடைசி முத்தமெனவும் நினைத்திருக்கவில்லை
போருக்கான வார்த்தைகள்
எழுதப்பட்ட நகரத்தில் உன்னை
தனியே விட்டு வந்தேன்.

எப்படி பிரிந்து போயிற்று என் தெரு?
இழப்பின் கொடுமையை
நீதான் முழுமையாக சுமந்திருந்தாய்
நான் உன்னை இழந்து
தனிப் பறவையாய் வீசப்பட்டேன்.

நமக்கு மேலால் நின்ற நாவல் மரம்
முறிந்து போனதை
நீ எனக்கு சொல்லாமலே விட்டிருந்தாய்
நிழலற்றுத் திரிவதை நான் பார்க்கவுமில்லை
நாம் நாவல் மரத்தை இழந்திருக்க
அது வெளவால்களை இழந்துபேயிற்று.

விமானங்கள் வீடுகளை
கவ்விக்கொண்டு போகிறதாக
நான் கனவு கண்டெழும்புகையில்
நீ நமது நகரத்தில் இருந்து
துரத்தப்பட்டாய்
காலையென்பது இழப்புடன்
தொடர்ந்து விடிகிறது.

எனது பேரூந்து திரும்பவில்லை
காத்திருப்பில் நீ அலைகிற துயர்மிகு
தெருவுக்கு நான் திரும்பவில்லை
போர் உன்னை
என்னிடமிருந்து பிரித்துவிட்டது.

யாரிடம் நான் சொல்ல?

உன்னை ஷெல் தின்றுவிட்டது
ஆயுதங்கள் மேலும் குவிக்கப்படுகையில்
போர் தொடரப்படுகிறபோது
வரைபடங்கள் மேலும்
அவதானிக்கபடுகிறபோது
நம்மை குறித்து என்ன இருக்கிறது?

உன்னிடமும்
நமது காதல் நகரத்திடமும்
நான் திரும்பப்போவதில்லை
திரும்பாத நகரத்தை
நாம் இழந்துவிட
நகரம் நம்மை இழந்திருக்கிறது
நகரமிட்ட முத்தம்
இன்னும் காயாமலிருக்கிறது.
¤

12.05.2009

பாழ்நகரத்தின் பொழுது/2009/காலச்சுவடு

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

من سریلانکایی نیستم! | பாரசீக மொழியாக்கம் | PERSIAN TRANSLATION




برای عبور از مرزها
من ویزا دارم
با گذرنامه اسرائیلی
در دستان یک فلسطینی

برای عبور از بازرسیها
من کارت شناسایی خود را نشان میدهم
همانند یک عراقی که کارت شناسایی یک امریکایی را دارد

برای خرجم
من چندین سکه دارم
همانند داشتن سکه های فرانسوی
با یک فرد سوریه ای

در خاک ما
سرود ملی پخش میشود
همانند سرود ملی هندوستان
که در منیپور پخش میشود

در سرزمین من
پرچم برافراشته شده
همانند پرچم چین
که در تبت خودنمایی میکند

در انگشتان من
اثر مهاجرت یک بی سرزمین مشاهده میشه
همآنند اثرات آتش
در دستان میانمار

Poem- Theepachelvan
Persian Translation- B. Ghasemi

I  AM NOT SRI LANKAN is popular poem in Tamil By poet Theepachelvan. this poem was translation in may languages. This is Persian translation by poet From Iran.
'நான் ஸ்ரீலங்கன் இல்லை!' கவிதை மற்றுமொரு சர்வதேச மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த கவிஞர் B. Ghasemi. பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகின்றது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

நிழற்போர்


பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்
அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்
காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்
காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியே
உன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்
துருவேறிய துப்பாக்கியை

ஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்
அவர்களின் தேவை

பிள்ளைகளைத் தேடும்
எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவே
சிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்
வீழ்ந்து புறளும் தாயே
உன் ஒடிந்த தேகத்தில்
உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியை

ஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்
அவர்களின் தேவை

ஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்
ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்க
அகதிமுகாமொன்றில் தவமிருக்கும்
மெலிந்துருகிய குழந்தையே
உன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியை

ஏனெனில், நம்மை அகதிமுகாங்களில் தடுப்பதுதான்
அவர்களின் தேவை

உடைந்த வாசல்கள் நிறைந்திருக்கும்
விடியாத் தேசத்தில்
மூடா விழிகளுடனிருக்கும்
முதிர்ந்த கிழவனே
உன் வெறுமையான சட்டைப்பையில் திணித்தனர்
மக்கிப்போன குண்டுகளை

ஏனெனில், நம்மை இன்னொரு போருக்குள் தள்ளுவதுதான்
அவர்களின் தேவை

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய்
களம் புகுந்த போராளியே
நிராயுதத்தை தழுவி நீ கைவிட்ட பீரங்கியை
எடுத்து வருகின்றனர்
இன்னொரு முள்ளிவாய்க்காலுக்காய்

ஏனெனில், நமது போராட்டத்தை போராக்குவதுதான்
அவர்களின் தேவை
0

தீபச்செல்வன்
 

நன்றி - விகடன் தடம்

செவ்வாய், 5 ஜூலை, 2016

அலைமகன்


இறுதி விடுமுறையில்
வீடு வருகையிலிட்ட
முத்தங்களின் நினைவிலுழல்கிறது
நீ வளர்த்த நாய்

கந்தகப் புகையால்
வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள்
நுழைந்துவிட்ட அம்மா
இன்னும் திரும்பவில்லை

ஓர் நள்ளிரவில்
நமது கடலில் நீ வெடிக்கையில்
அடித்திற்றுப் பெருமின்னல்

வெற்றிச்செய்தியாய் மாத்திரம்
வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால்
இன்னும் சில முத்தங்களையேனும்
இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா

இறுதித் தேநீரருந்திய
கோப்பையில் ஒட்டியிருக்கிறது
உன் புன்னகையினொரு துளி

நீ வெடித்த கடலில்
ஒரு மண்கோப்பை நீரெடுத்து
தாகம் நிரம்பியவுன் முகத்தைப்
பார்த்துப் பேசுகிறாள் அம்மா

அலைகளில் எழுமுன் பெயரை
உச்சரிக்கா
நாளில்
இப் பெருங்கடல்
வற்றிப் போயிருக்கும்

தீபச்செல்வன்

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்


ஜீலை 05, கரும்புலிகள் நாள்

தணல்ச் செடி




சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல
மறைந்திருந்த முகத்தில்
அடுக்கியிருந்த இரகசியங்கள்
சொல்லாத எண்ணற்ற கதைகள்
கலந்தன தீயில்

கருணைமிகு உன் புன்னகை
கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின்
சிறகுகளில் ஒழுகுகிறது தணல்

நெருப்பை தின்று
காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர்
கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக
வெடிக்கின்றன விதைகள்

கந்தகம் சுமந்து
வெடித்துருகிய இடத்தில்
தளைத்தது தணல் மலர்களுடன்
ஒரு செடி

அனல் கமழுமுன்
சமுத்திர மௌனத்தால்
கோணிற்று உலகு

இப் பூமி உள்ளவரை
முள்போலக் குற்றுமுன்
முடிவற்ற கையசைப்பு
மற்றும்
பெருங்கடல் உறைந்த வெண் புன்னகை
0

தீபச்செல்வன்

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

ஜூலை 05, கரும்புலிகள் நாள்

வியாழன், 30 ஜூன், 2016

சிறு பொறி


மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில்
திரும்ப முடியாமற் போகலாம் என
எண்ணுபவனின் கால் தடம்

மரணம் சைக்கிளின்
பின்கரியலில் ஏறியமர்ந்த தெருக்களில்
உள் உறிஞ்சிய பெருமூச்சு

நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி
தனை அழித்த நாட்களில்
நிராகரிக்கப்பட்டவனின் முனகல்

தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட
அடம்பிடிக்கும் குழந்தை போலோரு
கவிஞனின் குரல்

அதிகாரத்தை எதிர்த்தமையால்
கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின்
இரகசிய முகம்

மூன்றாம் நாள் பின் மாலையில்
உனை கொல்லவிருக்கிறோம்
என அறிவிக்கப்பட்ட பின்னர்
எழுதிய பதற்றமான இறுதிக்குறிப்பு

பதுங்குகுழிக்குள் வானம் இறங்கி
இருள் கவிழ்ந்து
போர் மண்ணை விழுங்கிச்
செறித்த காலத்தில்
தெறித்த சிறு பொறி

போரிருட்டில் அலையுமொரு சிறுவன்
கையில் ஏந்திய
அணையும் தீப்பந்தத்தை சுற்றியிருக்கும்
எழுத்துக்களின் கசியும் ஒளிபோலும்
இவ் வலை*.

தீபச்செல்வன்

ஜூன்30 2016

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்


*'நீ கொல்லப்படுவாய்!' என சிங்கள இராணுவத்தால் எச்சரிக்கப்பட்ட காலங்களில் என் கவிதைகளை பாதுகாகத்தது இந்த வலைப்பதிவு. இதுதான் இறுதிக் குரலோ என்று அஞ்சியபடி பதிவேற்றப்பட்ட கவிதைகளை சேகரித்ததும் இந்தத் தளமே. எழுத்தின் தொடர்புகளை, உறவுகளை தந்ததும் இந்த தளமே. என் எழுத்துக்களை பலருக்கும் கொண்டு சேர்த்த இந்த எளிய வலைத்தளத்தை, போர் நிறைந்து மூடுண்ட கிளிநொச்சி நாட்களில் (30.06.2007) உருவாக்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. 

வியாழன், 9 ஜூன், 2016

கொஸ்கம II



நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினால் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனரே!

அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?

உலகின் குண்டுகளனைத்தையும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டினரே?

குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்

கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையுள் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்

ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?

ஆம், தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது

'இது தமிழ்ழீழத்தை அழிக்கும் குண்டு'

நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால், வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றே!

ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவமுகாங்களுமற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடிபொருட்களற்ற பூமி.
0

தீபச்செல்வன்

கொஸ்கம இலங்கையின் தென்பகுதியில் உள்ள பிரதேசம். இப் பிரசேத்தில் உள்ள சாலாவ இராணுவமுகாமின் ஆயுதக்கிடங்கு வெடித்ததில் பிரதேசம் பெரும் அழிவுக்கு முகம் கொடுத்தது.

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

கொஸ்கம I


கந்தகப் புகை படிந்து கறுத்த சூரியன்
பீரங்கி இரண்டாகப் பிளந்த நிலா
செல்கள் கொலைசெய்த குளங்கள்
போர் அணைகளால் துண்டிக்கப்பட்ட ஆறுகள்
பொஸ்பரஸ் குண்டுகளால் நீவப்பட்ட குழந்தைகள்
விமானங்கள் மென்ற கோயில்கள், வீடுகள், தெருக்கள்
டாங்கிகள் கிழித்த நிலம்
திரும்புமிடமெல்லாம்
வெடிகுண்டுகளை நிரப்பிய இராணுவமுகாங்கள்
திறந்த குழாய்களுடன்
வீடு நோக்கி
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்லெறிகள்
நெற்றிகளை குறிபார்க்கும் துப்பாக்கிகள்
சன்னங்கள் சித்திரம் வரைந்திருக்கும்
உடலெங்கும் வெடிபொருட்களின் பாகங்களை
சுமந்தபடியிருக்கும் ஒருவனால்
வெடிகுண்டின் சிறு பெரியினால்
சிறுபுல் ஒன்று கருகுவதைக்கூட தாங்குதல் இயலாது.
0

தீபச்செல்வன்

நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 18 மே, 2016

முள்ளிவாய்க்கால் பரணி!







01
கால்கள் எதுவுமற்ற என் மகள்
தன் கால்களைக் குறித்து
ஒருநாள் கேட்கையில்
நான் என்ன சொல்வேன்?

அவர்கள் கூறினர்
யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென
ஒருவரும் கொல்லப்படவில்லையென
யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென

அவர்கள் கூறினர்
ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென
யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென

பின்னர் கூறினர்
போராளிகளே மக்களைக் கொன்றனரென
பின்னர் கூறினர்
படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென

இறுதியில் சொல்லினர்
யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென

எமை மீட்கும் யுத்தமென்றனர்
மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா?
மனிதாபிமான யுத்தமென்றனர்
பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா?

நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து
மேலும் அதை தொடர்ந்து
எல்லாவற்றையும் மறப்போமென்றனர்
எதையும் பகிராமல்
ஒருதாய் பிள்ளையென்றனர்

தாயற்ற என் மகளுக்கு
இதையெல்லாம் எப்படி விளக்குவேன்?

பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது
மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது

திரும்பாத இழப்பை
வெற்றி என்போரே!
என் மகளைக் குறித்து
நான் கண்ணீர் மல்குதல்தான்
பழிவாங்குதலா?

02
எனதாசை மகளே!
இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்?
இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்?

காயங்களை மூடும்
இழப்புக்களை மறைக்கும்
தந்திரம் மிக்க வார்த்தை
என்னிடமில்லை

மீளப் பெறமுடியாத கால்களை மறந்து
கால்களை பறித்த வெற்றியை
கொண்டாடச் சொல்லினர்

அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர்
நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம்
மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்?

அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது
அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது
நிலத்துடன் லட்சம் மனிதர்களை
தின்று செரித்தது

எலும்புக்கூடுகளினிடையே
நிணங்களினிடையே
குருதியினிடையே
கொடி உலுப்பி மகிழ்ந்தது

அவர்கள் சொல்லுவதைப் போல
அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ?
அவர்கள் சொல்வதைப்போல
அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ?

திட்டமிட்டு செய்யப்பட்டவைகள்
மறக்கக்கூடியவை அல்லவே
வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள்
மனிக்கக்கூடியவை அல்லவே

03
ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும்
வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும்
புகைப்படங்களில் இருக்கும்
இல்லாதவர்களைக் குறித்தும்
பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும்
என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே?

இரத்தமும் சதைகளும் படிந்த
பழைய பத்திரிகைகளை
நீ விரித்துப் பார்க்காதபடி
மறைவாகவே வைத்துள்ளேன்

04
யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி
எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர்
என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள்
என் கால்களுக்கு என்ன ஆனது?
ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

என் தாயிற்கும்
என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று?
நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென
அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்?

மாபெரும் இனக்கொலையை ருசிக்கும்
பற்கள் நிரம்பிய கொடியை
என் மகளுக்கு பரிசளிக்கும்
இந்த நாட்களில் தொடங்குமொரு காலம்
எப்படியானதாய் இருக்கும்?

மேலுமொரு காயம் வேண்டாம் மகளே
மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே

05
நாம் கேட்பதெல்லாம்
உயிருக்கு உயிரல்ல
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூரும் உரிமையை
மாண்டுபோனவர்களின் கல்லறைகளை
அழுது கண்ணீர் விடும் விடுதலையை

நாம் கேட்பதெல்லாம்
குருதிக்குக் குருதியல்ல
அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை

நாம் கேட்பதெல்லாம்
பழிக்குப் பழியல்ல
இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை

நாம் கேட்பதெல்லாம்
எவருடைய உரிமையையுமல்ல
எம்முடைய உரிமையை

எனதருமை மகளே!
நாம் கேட்பதெல்லாம்
நீதியின் உண்மையை
உண்மையின் நீதியை

உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து
இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது
எளிய நம் சனங்களின் குருதியினால்
பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு
அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது


ஏனெனில் அவர்களின் போர்
சூழ்ச்சிகளினால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
அநீதிகளால் வென்றது
ஏனெனில் அவர்களின் போர்
விதிகளை மீறியது

05
எனதருமை மகளே!
நம்முடைய நிலத்தை அபகரிக்கவும்
தம்முடைய அதிகாரத்தை பரப்புவும்
நம்முடைய அரசை கலைக்கவும்
தம்முடைய வேர்களைப் பதிக்கவும்
நம்மை பூண்டோடு துடைக்கவும்
உனது கால்களை பிடுங்கி
உன் தாயையும்
ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில்
இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்?

தீபச்செல்வன்

2016

ஓவியம்: றஷ்மி

பிரசுரம்: குளோபல் தமிழ் செய்திகள்

சனி, 7 மே, 2016

Non. Je ne suis pas Sri Lankais/ பிரெஞ்சு மொழியாக்கம்






நான் ஸ்ரீலங்கன் இல்லை/பிரெஞ்சு மொழிபெயாக்கம்

கவிதை- தீபச்செல்வன்
பிரெஞ்சு மொழியாக்கம் - க. வாசுதேவன்

Non. Je ne suis pas Sri Lankais!

Je possède un passeport
pour franchir les frontières,
comme un Palestinien en a un israélien

Je possède une carte d'identité
pour passer les barrières de contrôle
Comme un Irakien en a une américaine,

Je possède quelques monnaies
pour mes achats,
Comme un Syrien possède quelques Euros

On entonne un hymne national
sur ma terre,
Comme on entonne celui de l'Inde
A Manipur,

Une drapeau national est hissé
dans ma patrie,
Comme celui des Chinois flotte
en Tibet

Sur mon doigt, je porte l'emblème
du réfugié appatride,
Comme la brûlure sur la mains des Myanmarais

Auteur: Theepachelvan
Traduit par Vasudevan

க. வாசுதேவன் : ஈழத்தை சேர்ந்த கவிஞர் க.வாசுதேவன். புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்கிறார். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், என பன்முக ஆளுமைகொண்டவர். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே ஆகிய இரண்டு கவிதைநூல்களையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதியவர்.

'Jeg er ikke Srilankeser’/நோர்வேஜியன் மொழியாக்கம்



* * *
For å krysse landegrenser
bærer jeg et pass
I likhet med Israelsk pass
i palestinernes hender

For å passere okkupantens sjekkposter
har jeg et Identitetskort
slik som Irakerne går med
Amerikanske identitetskort

For mine utgifter
Har jeg noen mynter
Akkurat som Syriske borgere
holder Euromynter i sine hender

I mitt hjemland
strømmer en nasjonalsang ut i luften
Slik som den Indiske nasjonalsangen
blir sunget i Manipur

Et nasjonalflagg er heist opp
på min jord
Samme som det Kinesiske flagget i Tibet

Fingrene mine
bærer et stempel
For å identifisere meg
som den 'statsløse flyktning'
Dette er som brannsår
på Burmeserenes hender!

* * *

- Dikt skrevet av (Tamil):Theepachelvan
- Oversatt av (Norsk): Rooban Sivarajah

Diktet uttrykker tamilenes lidelser på øya Sri Lanka ved å ta for seg lidelsene til de statsløse flytninger i forskjellige deler av verden. Tamilsk versjon av diktet var publisert i ’Anandavikatan’, en ukentlig magasin i det sør indiske delstaten ‘Tamil Naadu'.

0

புதன், 4 மே, 2016

கடற் குழந்தை



பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை

செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு

அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும்

பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்?
பேரலையே நீயா அவனின் படகை உடைத்தாய்?

குடிவரவு சட்டத்தை மீறி
அய்ரோப்பியாவுக்குள் நுழைய எத்தனித்தான் என்றனர்
ஆயுதங்களை பரிசளிப்பவர்கள்
குடியகழ்வு சட்டத்தை மீறிச் சென்று
துருக்கிக்கரையில் துயில்கிறான் என்றனர்
யுத்தத்தின் முதலாளிகள்

ஏனெனில் அவன் சிரியக் குழந்தை

எதுவும் பேசாமல் குப்புறக் கிடந்தான் அய்லான் குர்தி*
குண்டு தின்று வீசிய ஈழக் குழந்தையர் போல
சன்னங்கள் துளைத்த ஆப்பகானியக் குழந்தைபோல
பிய்த்தெறியப்பட்ட ஈராக்கியக் குழந்தைபோல
துரப்பட்ட மயன்மாரியக் குழந்தைபோல
பசியால் துவண்ட சோமாலியாக் குழந்தைபோல

இன்னுமின்னும் எத்தனை தேசங்களின்
இன்னுமின்னும் எதற்காகவெல்லாம்
இன்னுமின்னும் எத்தனை குழந்தைகள்
இன்னுமின்னும் எங்கெல்லாம் வீசப்படுவர்?

ஈழக் கடற்கரையில் அன்றெமது குழந்தைகள்
கொன்று வீசப்பட்டபோது
எழவில்லை ஒரு குரலும்

ஏனெனில் அவர்கள் ஈழக் குழந்தையர்

யுத்தத்திற்கான உலகில்
குழந்தைகளுக்குச் சவக்குழியானது கடல்.
¤

தீபச்செல்வன்

நன்றி: காக்கைச் சிறகினிலே

“அய்லான் குர்தி“ ஓர் சிறியக் குழந்தை. போர் காரணமாக தன் நாட்டைவிட்டு அகதியாக வெளியேறி அய்ரோப்பாவிற்குள் நுழைய முற்பட்டபோது துருக்கில் நடந்த படகு விபத்தில் கடலில் மூழ்கி இறந்தான். அவனின் உடல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது. 



வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Ich bin kein Sri - Lanker/ யேர்மனிய மொழியாக்கம்


Ich bin kein Sri - Lanker

* * *

Um die Wege zu kreuzen,
habe ich einen Pass –
Wie der israelischer Pass
In den Händen eines Palästinensers.

Um Grenzen zu überqueren,
habe ich eine Identitätskarte –
Wie eine amerikanische Identitätskarte
Bei den Irakern.

Um auszugeben,
Habe ich einige Münzen. –
Wie ein Syrischer Bewohner
Mit französischen Euros.

In meiner Heimat,
Wird die Nationalhymne übertragen –
Wie die Nationalhymne von Indien
In Manipur.

In meinem Land,
Wurde eine Fahne gehisst –
Wie die chinesische Fahne
In Tibet.

Auf meinem Daumen,
habe ich eine heimatlose Flüchtlingsunterschrift –
Wie ein Brandwunde
An der Hand eines Myanmars.

Poem - Theepachelvan
translation - aswin shanmuganathan


Hinweis: "Ich bin kein Sri Lanker" - dieses Gedicht wurde von Shanmuganathan Assvin in deutscher Sprache übersetz. Er ist die nächste Generation der Tamilen, der in der Schweiz aufwuchs.

குறிப்பு 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' என்ற இக் கவிதையை புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்த அஸ்வின் சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.


நன்றி: பதிவுகள் நான் ஸ்ரீலங்கன் இல்லை/யேர்மனிய மொழிபெயர்ப்பு




வியாழன், 21 ஏப்ரல், 2016

நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II




-----------------------
வழிகளைக் கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச் சாவடிகளைக் கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

தீபச்செல்வன்

நன்றி - ஆனந்த விகடன்
ஓவியம் ஹப்சிகான்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

கவிதை எனது ஆயுதம்



என்னிடம் துப்பாக்கிகள் இல்லை
பீரங்கிகள் இல்லை
குண்டுகளும் டாங்கிகளும் இல்லை
வார்த்தைககள் மட்டுமே உண்டு

அவை என்னுடைய வார்த்தைகளல்ல
என்னுடைய நிலத்தின் வார்த்தைகள்
என்னுடைய சனங்களின் வார்த்தைகள்

துப்பாக்கிளோடு அலையும்
டாங்கிகளின் உலவும் வீரமிகு படைகள்
என் கவிதைகளுக்கு ஏன் அஞ்சுகின்றனர்?

எதிர்வீடுகளில் விசாரிப்பதுவும்
தெருவில் என் கால் அடிகளை எண்ணுவதும்
அறியாத தொலைபேசி எண்களிலிருந்து
பதிலற்று அழைப்புக்களை துண்டிப்பதுவும்

நள்ளிரவில் நாய்களை குலைக்கச் செய்வதும்
நண்பகலில் மோட்டார் வண்டியில்
உறுமியபடி செல்வதும்
என் புத்தகங்களை தேடுதல் செய்வதும்
எனை ஏதோ செய்யுமென நினைத்தனர்
வீரமிகு படைகள்
   
உன்னுடைய துப்பாக்கிகளை முறிக்கும்
குண்டுகளை நொருக்கும்
பீரங்கிகளை உடைக்கும்
டாங்கிகளை சிதறடிக்கும்
முகாங்களை அழிக்கும்
எனது வார்த்தைகளுக்கு நீ அஞ்சுவாய்

நாமோ எமது நிலத்திற்காய் 
போராடுகிறோம்
நீயோ எம்முடைய நிலத்தை அபகரிப்பதற்காய்
போர் புரிகிறாய்

ஆதலால் நீ என் கவிதைகளுக்கு அஞ்சுவாய்
என் சனங்களுக்கு அஞ்சுவாய்
என் நிலத்திற்கு அஞ்சுவாய்
0

தீபச்செல்வன்

நன்றி - தீராநதி
பெப்ரவரி 2016

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...