Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 12 மே, 2008

துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்.

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------
எனது அறையை சூழ்ந்து வந்தன
பல மிருகங்கள்
இரவை கடித்து குதறிய
மிருகங்களின் வாயில் கிடந்து
இரவு சீரழிந்தது
நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளின்
முன்பாக
எனது இரவின் பாடல்
விழுந்து சிதறிக் கிடந்தது
இன்னும் எனது காதலி
அறைபோய்ச் சேரவில்லை.

மிருகங்கள் பாதையையும்
அறுத்து தின்றன
பேரூந்தை விட்டிறங்கி அவள்
வயல்களுக்கால்
நடந்து போகிறாள்
இருவரும் அறைபோய்ச் சேர்வதற்கு
இடையில்
ஆயிரம் மிருகங்கள் வழிமறித்தன.

பறித்து வீசப்பட்ட
எனது சைக்கிளில் ஆயிரம் குண்டுகள்
பொருத்தப்பட்டிருந்தது
கால்களிற்குள் மாட்டி
அறுந்து போன ஒரு செருப்பை
காவிச் சென்று ட்ரக்கில் போடுகிறது
மோப்ப நாய்.

அறை முழுக்க
அறைகளை முழுக்க
மோப்பமிடுகிறது அந்த நாய்
புத்தகங்களையும்
பேனாக்களையும்
ட்ரக்கில் நிரப்பிவிடுகிறது.

அந்த மிருகங்கள்
என்னை நெருங்கி அறைந்து விடுகின்றன
கைகள் கழன்றுவிட
நான் முண்டமாகிக்கிடந்தேன்
தணிக்கை செய்யப்பட்ட
செய்தியை
வானொலி வாசிக்கிறது.

சொற்கள் கொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட
துப்பாக்கிகள் விழுங்கிய இரவின்
மறுநாள்
குருதி வடியும் புத்தகங்களை
சுமந்து
நானும் அவளும் வகுப்பறைக்கு போனோம்.
-----------------------------------------------------------------------------
07.05.2008 அன்றைய இரவையும் மறுநாள் காலையையும் இணைத்து
---------------------------------------------------

1 கருத்துகள்:

mahendran siva சொன்னது…

நல்ல கவிதை என்று கூறமுடியவில்லை. நல்ல கவிதைகள் செய்ய முடியாத ஏதோ ஒன்றை எனக்குள் செய்து பார்க்கிறது உங்கள் கவிதை. வாய்விட்டு அழமுடியாத அவதி.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...