o தீபச்செல்வன் ------------------------------------------------------------------
நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில்
குறித்து வைத்த திகதிகள்
ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன.
வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள்.
யரோ ஒருவருடைய வீட்டில்
அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு.
வெளியேறி வருவதற்கான
அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக
அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை
அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன்.
புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள்
வந்துகொண்டிருக்கும் வழியால்
நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள்.
இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி
தங்கை வருகிறாள்.
வெயில் தின்ற
அவர்களின் புன்னகையைப் பற்றி பாடிக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.
நகரத்தின் வழிகள் பலவாறு பிரிந்து செல்கின்றன.
திகதிகள் கடந்து செல்ல
தொடர்ந்து காத்திருக்கும் அம்மாவை
அழைத்துக்கொண்டு வரும் பொழுது நகரமெங்கும்
அகதிப் பைகளை தூக்கியபடி
அடையாளத்தை உறுதி செய்துகொண்டு
காலச்சுமைகளை சுமந்தபடி
திரிகின்றனர் பெருநிலத்தின் சனங்கள்.
திரும்புவதற்கு ஒரு வீடு இல்லை என்பதையும்
கடிதம் வந்து சேருவதற்கு ஒரு முகவரி இல்லை என்பதையும்
அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
முகவரியும் வீடுமற்று அலையும் அகதியாகி
யாரோ ஒருவருடைய வீட்டில்
வைத்து வரப்பட்ட உடுப்புப் பையை
நான் எடுத்து வருகிறேன் இன்னொரு வீட்டுக்கு.
வீட்டுக்கு வீடும்
தெருவுக்கு தெருவும்
அகதியாகி அலைந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகத்திற்கு
வரும் பொழுது மீளவும் பெயர்ந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ ஒருவருடைய சட்டி பானையில் கொதித்துக்கொண்டிருக்கிறது
மதிய உணவு.
தூக்கிச் செல்லும் சுமை நிறைந்த பைகள் முதல்
எல்லாமே வார்த்தைகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றன.
அகதிகள் அலைந்து கொண்டிருக்கும் நகரத்தில்
வைத்து நிச்சயமாக வீடு திரும்பலாம்
என்றபடி அம்மா மீளவும் ஒரு திகதியை மாற்றிச் சொல்லுகிறாள்.
மாலை நேரமாய் அகதிகளை அள்ளிக்கொண்டு
புழுதியடிக்கப்பட்ட பேரூந்து
தடுப்பு முகாங்களை நோக்கி புறப்பட்டுச் செல்லுகின்றன.
__________________________________________________
(வவுனியா நகரத்தில் இருந்து) 16.02.2010
சனி, 27 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்
# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
இணைப்புக்கள்
- மாற்றுப்பிரதி
- வா. மணிகண்டன்
- ஹரிகரசர்மா
- தானா.விஷ்ணு
- மைதிலி
- பெண்ணியம்
- நிலாரசிகன்
- கடற்கரய்
- த. அஜந்தகுமார்
- லீனா மணிமேகலை
- எச்.பீர்முஹம்மது
- தேவஅபிரா
- ஸ்மைல் வித்யா
- குட்டி ரேவதி
- பெருந்தேவி
- இரயாகரன்
- ப.வி.ஸ்ரீரங்கன்
- டிசே தமிழன்
- நிவேதா
- மற்றவர்கள்
- ஷோபாசக்தி
- துவாரகன்
- கருணாகரன்
- ஃபஹீமாஜஹான்
- தமிழ்நதி
- சித்தாந்தன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- புதுவைஇரத்தினதுரை
- சுகுமாரன்
- தியா
வலைப்பதிவு பட்டியல்
-
-
சர்வதேச நாவல் | கபிலேசன் கமலதாசன்5 மாதங்கள் முன்பு
-
TALK TO OUR TOMBS, ATLEAST FROM NOW ON!5 ஆண்டுகள் முன்பு
-
பலி நகரத்தின் இரவுகள்13 ஆண்டுகள் முன்பு
-
தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு13 ஆண்டுகள் முன்பு
-
-
சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி14 ஆண்டுகள் முன்பு
-
திருப்பிக் கொடுத்த சைக்கிள்15 ஆண்டுகள் முன்பு
-
1 கருத்துகள்:
காலம் அகாலமான நாட்டில் மனிதர்களின் இருப்பும் இண்மையும் வேறுவேறா என்ன?
கருத்துரையிடுக