o தீபச்செல்வன் ----------------------------------------
அந்தத் தாய் நம்புவதைப்போல
அவனின் தந்தையும்
சகோதரர்களும் நம்புவதைப்போல
அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம்.
அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன?
அவன் பல குழந்தைகளுடன்தான்,
பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான்.
தோழனே!
பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின்
இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது.
எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
அஞ்சலிக்குறிப்புகளில்
அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது.
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
அஞ்சலிக்குறிப்புக்களை
எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது.
உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன்.
ஏதோ ஒரு தடுப்பு முகாமையும்
ஏதோ ஒரு சிறைச்சாலையும்
மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய்.
யாரே பார்த்திருக்கிறார்கள்
அவனின் கிழிந்த கால்சட்டையை.
ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும்
சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும்
அந்தச் சிறுவன் அறிந்திருந்தான்.
தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும்
கண்டு அஞ்சியிருந்தான்.
எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா?
அவன் கரைக்கப்பட்ட நிலத்தில்
இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா?
தன் முகத்தையும் புன்னகையையும்
அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான்.
தோழனே!
நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள்.
அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள்
நிறைவு செய்துகொண்டு
வகுப்பறைக்கு திரும்புவான்.
ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு
திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.
_______________________
( யுத்தத்தில் கொல்லப்பட்ட தர்மேகனுக்காய் )
நன்றி : உலக தமிழ்ச் செய்திகள்
வெள்ளி, 12 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்
# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
இணைப்புக்கள்
- மாற்றுப்பிரதி
- வா. மணிகண்டன்
- ஹரிகரசர்மா
- தானா.விஷ்ணு
- மைதிலி
- பெண்ணியம்
- நிலாரசிகன்
- கடற்கரய்
- த. அஜந்தகுமார்
- லீனா மணிமேகலை
- எச்.பீர்முஹம்மது
- தேவஅபிரா
- ஸ்மைல் வித்யா
- குட்டி ரேவதி
- பெருந்தேவி
- இரயாகரன்
- ப.வி.ஸ்ரீரங்கன்
- டிசே தமிழன்
- நிவேதா
- மற்றவர்கள்
- ஷோபாசக்தி
- துவாரகன்
- கருணாகரன்
- ஃபஹீமாஜஹான்
- தமிழ்நதி
- சித்தாந்தன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- புதுவைஇரத்தினதுரை
- சுகுமாரன்
- தியா
வலைப்பதிவு பட்டியல்
-
-
சர்வதேச நாவல் | கபிலேசன் கமலதாசன்5 மாதங்கள் முன்பு
-
TALK TO OUR TOMBS, ATLEAST FROM NOW ON!5 ஆண்டுகள் முன்பு
-
பலி நகரத்தின் இரவுகள்13 ஆண்டுகள் முன்பு
-
தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு13 ஆண்டுகள் முன்பு
-
-
சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி14 ஆண்டுகள் முன்பு
-
திருப்பிக் கொடுத்த சைக்கிள்15 ஆண்டுகள் முன்பு
-
2 கருத்துகள்:
இதுதான் இன்றைய சமகாலப் பதிவு என்பதற்கு இந்தக் கவிதையும் சாட்சியாக உள்ளது. எங்கள் மக்கள் இழந்தவைகள் கணக்கிட முடியாதவை. அதில் அஞ்சலிக்கவிதை எழுதக்கூட யாருமில்லாமல், இறந்ததற்கு அடையாளம் இல்லாமற்கூட எம்மக்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்று மீளவும் திரும்பியுள்ள மக்களின் தற்கால வாழ்க்கையும் பதிவாக்கப்பட வேண்டும். சீசன் கவிதைகளை எழுதித்தள்ளும் கவிஞர்கள் கொஞ்சம் இந்தப் பக்கமும் தங்கள் பார்வையைத் திருப்பட்டும்
துவாரகன்
http://www.vallaivelie.blogspot.com/
உனது எழுத்துக்களை படித்தபோது கருத்துக்களில் கசிந்திருந்த இரத்தம் என்மேல் விசிறப்பட்டது. ஆத்தரமான மன்னிக்கவும் காத்திரமான கருத்துக்கள் உன்னிடத்தில் பிரவேசிக்கின்றபோது அதனை தமிழே அதனைக் கொஞ்சவேண்டும் என்கிறது. தொலைவில் வானம் இரண்டு கிடக்க உனது விஸ்வரூபங்கள் விளக்காய் எரிகின்றன. எனக்கும் எனது படைப்புக்களை அனுப்பி வை. தொடரட்டும் உனது படைப்புக்கள்.
கருத்துரையிடுக