o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
இந்தக் குழந்தைகள் எப்பொழுதும் கூடாரத்திற்கு
வெளியில் செல்லவே விரும்புகிறார்கள்
என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
மிகவும் சிறியதான இந்தக் கூடாரம்
ஒரு சிறைச்சாலையைப்போல பெரிதான சித்திரவதைகளை
திறந்துகொண்டிருக்கிறது.
எங்கும் நடக்க முடியவில்லை., காட்டு மரங்களின் வேர்கள்
முகங்களை குத்திக்கொண்டிருக்கிறது.
தோழரே, கூடார மக்கள் குறித்து நீங்கள் பேசுவது
உங்களுக்கு ஆபத்தை தரலாம்.
நாங்கள் பேசுவதை நிறுத்துவதும்
கோருவதை தவிர்பதுமாகவே எல்லாம் நிகழ்ந்துவிடுகிறது.
இந்தப் புழுதியிலும் சேற்றினிலும்
அவர்கள் எப்பொழுதும் அழகான குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
அவர்களது கேள்விகளுக்கு
நம்மால் பதில் சொல்ல முடியவில்லை.
அவர்களுக்கு சொல்லும் கதைகள் எல்லாம்
உலகத்தின் கூடாரங்கள் பற்றிய கதைகளாகத்தானிருக்கின்றன.
அதிகாரத்தின் கூர்மையில்
அவர்களது புன்னகையையும் விளையாட்டு மைதானங்களும்
இன்னும்பிற வழிகளும் சிதைந்துபோயிற்று.
உலகத்தின் எங்களைப்போன்ற சனங்களுக்காக
கூடாரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தோழரே, இவர்களுக்காக நாங்கள் வியப்புட்டும்
எந்தக் கதைகளையும் சொல்ல முடியவில்லை.
பொம்மைகளையும் இதர விளையாட்டுப் பொருட்களையும்
இவர்கள் தூக்கி எறிகிறார்கள்.
கூடாரத்துக்குள் இவர்களின் உலகம் சுருங்கியிருக்கிறது.
குழந்தைகள் முட்கம்பிகளுக்குள்
எங்கேனும் திரிந்து விளையாடி திரும்பி வரலாம்
என்று முகாம் விதிகள் சொல்லுகின்றன.
கூடாரத்தை விட்டு வெளியேற எதை வேண்டுமானாலும்
செய்துவிடத் துடிக்கிறார்கள் சற்று வயது கூடிய சிறுவர்கள்.
மிக நீணட காலமாக கூடாரங்களை பாவித்திருக்கிறோம்.
மண் கூடாரங்களையும்
இந்த இறப்பர் கூடாரங்களையும் வழங்க மறுப்பின்றி
அனுமதி தரப்பட்டிருக்கிறது.
இதற்குள்ளே குழந்தைகளைப் பெறவும்
அவர்களை வளர்க்கவும் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்கள் வயதாக வயதாக பேசுபவைகளினால்
உலகத்தின் அத்தனை அகதிகளுக்கும்
ஆபத்து நேர்ந்துவிடும் போலிருக்கிறது
கூடாரங்களை மீறாத வகையிலேயே
நாங்கள் காவலிடப்பட்டிருக்கிறோம்.
ஜன்னல்களும் வாசல்களும் கூடிய இந்தக் கூடாரங்களை
தங்கள் புத்தகங்களிலெல்லாம் வளரும் சிறுவர்கள்
வரைந்து வைத்திருக்கிறார்கள்.
கூடார மக்கள்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கறார்கள்.
எங்கள் வளரும் சிறுவர்களுக்கும்
சில கூடாரங்களை அடுத்த வாரங்களில்
தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
வண்ண வண்ணமான கூடாரங்களை புதிதாக இறக்குகிறார்கள்.
எங்கள் குழந்தைகளும் நாங்களும் அனுமதிக்கப்படும்பொழுது
கூடாரங்களை விட்டு வெளியே செல்லவும்
அல்லது நிரந்தரமாக இதற்குள் தங்கவும் தயாராக இருக்கிறோம்
என்பதை நாங்களாகவே வற்புறுத்தலின்றி ஊடகங்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.
மிக அவசர அவசரமாக கூடாரங்களைத் தந்தபிறகு
அவை நிரந்தரமாக காலுன்றப்பட்டன.
------------------------------------------------------------------------
(27.10.2009 ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோ வன்னி அகதிகளை "கூடார மக்கள்" என அழைக்கிறார்)
நன்றி: வார்த்தை டிசம்பர்
சனி, 12 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்
# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்
இணைப்புக்கள்
- மாற்றுப்பிரதி
- வா. மணிகண்டன்
- ஹரிகரசர்மா
- தானா.விஷ்ணு
- மைதிலி
- பெண்ணியம்
- நிலாரசிகன்
- கடற்கரய்
- த. அஜந்தகுமார்
- லீனா மணிமேகலை
- எச்.பீர்முஹம்மது
- தேவஅபிரா
- ஸ்மைல் வித்யா
- குட்டி ரேவதி
- பெருந்தேவி
- இரயாகரன்
- ப.வி.ஸ்ரீரங்கன்
- டிசே தமிழன்
- நிவேதா
- மற்றவர்கள்
- ஷோபாசக்தி
- துவாரகன்
- கருணாகரன்
- ஃபஹீமாஜஹான்
- தமிழ்நதி
- சித்தாந்தன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- புதுவைஇரத்தினதுரை
- சுகுமாரன்
- தியா
வலைப்பதிவு பட்டியல்
-
-
சர்வதேச நாவல் | கபிலேசன் கமலதாசன்5 மாதங்கள் முன்பு
-
TALK TO OUR TOMBS, ATLEAST FROM NOW ON!5 ஆண்டுகள் முன்பு
-
பலி நகரத்தின் இரவுகள்13 ஆண்டுகள் முன்பு
-
தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு13 ஆண்டுகள் முன்பு
-
-
சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி14 ஆண்டுகள் முன்பு
-
திருப்பிக் கொடுத்த சைக்கிள்15 ஆண்டுகள் முன்பு
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக