இம்முறையும் குழந்தையை நாங்கள்தான் கொன்றோம்
ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை
மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு
ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்?
அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான்
தந்தை எதற்காகச் சென்றார்?
யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே
அதனால் அக்குழந்தையை நாம்தான்
பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம்
தந்தைக்கு கொடுப்பற்காக
நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர
அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை
கடலில் இறங்கிய பொழுது
முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது
எனினும் அவன் சென்றான்
ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே
நேற்று ஒரு தோணி மூழ்கிய பொழுதும்
இன்றைய தோணியும் புறப்பட்டு விட்டது
ஒரு குழந்தைக்காக நான் இரங்கிக்கொண்டிருக்கையில்
கும்மிருட்டில் இன்றொரு குழந்தை
முதுகிலொரு கனத்த பையுடன்
கள்ளத்தோணியில் ஏறிக்கொண்டிருக்கிறது
ஆழ் கடலிருட்டில் அலைந்து கொண்டிருப்பது
நிலமற்ற தோணிகளெனினும்
எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் சடலங்களாக
கடல்மடியில் குப்புறக்கிடக்கும் இக்குழந்தை
ஆப்கானியக் கள்ளத்தோணியா?
ஈரானியக் கள்ளத்தோணியா?
மியன்மார்க் கள்ளத்தோணியா?
பெருங்கடலைக் குடித்தும் தாகம் அடங்காமல்
கள்ளத்தோணியென கிடக்கிறது ஒரு ஈழக்குழந்தை
நாம்தான் அவனைக்கொன்றுவிட்டோம்
ஏனெனில் எம்மிடம்தான் எதுவுமில்லை
எம் நிலத்தில் நாளை ஒரு குழந்தையுமில்லை!
-தீபச்செல்வன்
நன்றி - ஆனந்த விகடன்
ஏனெனில் அவனுக்கென்று எம்மிடம் எதுவுமில்லை
மூன்று வயதுச் சிறுவனொருவனுக்கு
ஆழ்கடலில் என்ன வேலையென நீங்கள் கேட்கக்கூடும்?
அவன் தன் தந்தையைச் தேடிச்சென்றான்
தந்தை எதற்காகச் சென்றார்?
யாருக்கும் இங்கு ஒன்றுமில்லையே
அதனால் அக்குழந்தையை நாம்தான்
பேர்த் நகருக்குச் செல்லுமாறு துரத்தினோம்
தந்தைக்கு கொடுப்பற்காக
நெடுநாளாக வைத்திருந்த முத்தங்களைத் தவிர
அவன் எதையும் எடுத்துச்செல்வில்லை
கடலில் இறங்கிய பொழுது
முன்னால் எதிர்கரையும் மரணமும் மிதந்தது
எனினும் அவன் சென்றான்
ஏனெனில் அவனுக்கென்று நிலம்தான் இல்லையே
நேற்று ஒரு தோணி மூழ்கிய பொழுதும்
இன்றைய தோணியும் புறப்பட்டு விட்டது
ஒரு குழந்தைக்காக நான் இரங்கிக்கொண்டிருக்கையில்
கும்மிருட்டில் இன்றொரு குழந்தை
முதுகிலொரு கனத்த பையுடன்
கள்ளத்தோணியில் ஏறிக்கொண்டிருக்கிறது
ஆழ் கடலிருட்டில் அலைந்து கொண்டிருப்பது
நிலமற்ற தோணிகளெனினும்
எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் சடலங்களாக
கடல்மடியில் குப்புறக்கிடக்கும் இக்குழந்தை
ஆப்கானியக் கள்ளத்தோணியா?
ஈரானியக் கள்ளத்தோணியா?
மியன்மார்க் கள்ளத்தோணியா?
பெருங்கடலைக் குடித்தும் தாகம் அடங்காமல்
கள்ளத்தோணியென கிடக்கிறது ஒரு ஈழக்குழந்தை
நாம்தான் அவனைக்கொன்றுவிட்டோம்
ஏனெனில் எம்மிடம்தான் எதுவுமில்லை
எம் நிலத்தில் நாளை ஒரு குழந்தையுமில்லை!
-தீபச்செல்வன்
நன்றி - ஆனந்த விகடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக