Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

சனி, 9 ஜனவரி, 2010

பால்மா பைக்கற்றுக்களை கோரும் குழந்தைகளின் துவிச்சக்கர வண்டிகளை கோரும் தாய்மார்கள்


o தீபச்செல்வன்
------------------------------------------------------------------

குழந்தைகளுக்கு ஏனைகளை கட்டுவதற்காக
பழைய சீலைகளை
யார் யாரிடமோ வேண்டிக்கொண்டு சென்றார்கள்.
இரவல் சைக்கிள்களில் குழந்தைகளை பின்புறமாக
ஏற்றிக்கொண்டு
புத்தகங்களை கொலுவியபடி அவர்கள் போகிறார்கள்.
இவர்கள் ஒரே நேரத்தில்
தாயாகவும் மனைவியாகவும் மாணவியாகவும்
இருக்கிறார்கள் என்ற கதையாடல்கள்
புத்தகமெங்கும் விரிந்து கிடக்கிறது.

விதவை மாணவிகள் பற்றியும்
கணவன் பிரித்தெடுக்கப்பட்ட மாணவிகள் பற்றியும்
நிறையக் கடிதஙகளை எழுதியிருக்கிறேன்.
அவர்கள் எனக்கெழுதிய கடிதங்களில் வீங்கி வழிகிறது கண்ணீர்.

குழந்தைகள் வெகுநேரமாய்க் காத்திருக்க
வீடுகளுக்காக
மலைநேரங்களில் அலைந்து திரும்புகிறார்கள்.
தங்கள் குழந்தையையும் புத்தகத்தையும் பத்திரமாக
எடுத்து வைத்துக்கொண்டு
தவித்துக்கொண்டிருக்கும் தேனீரை அருந்துகிறார்கள்.

அவர்கள் கோருவது குழந்தைகளுக்காக
பால்மபைக்கற்றுக்களையும்
குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புத்தகங்களை கொண்டு செல்ல
ஒரு துவிச்சக்கரவண்டியையும்.
கொதித்துக்கொண்டிருக்கும் மாலை நேரம்
தேனீர்க்கோப்பைக்குள்
கீழிறங்குகிற சூரியன் விழுந்ததைப்போலிருக்கிறது.

உறவினரின் வீட்டில் தங்கியிருக்கத் தொடங்கி
எத்தனை நாளாகிறது?
காலை முதல் குழந்தை அழுதுகொண்டிருக்கிறது.
புத்தகத்தில்
வீடுகள் முளைத்துச் செழிக்கின்றன.
விரிக்கப்பட்ட புத்தகத்தின்
நடுவில்
சைக்கிள்களும்
பால்மாபைக்கற்றுக்களும் கொட்டிக்கிடக்கின்றன.
மாலைநேரத்தையும் தாயின் புத்தகத்தையும்
குழந்தை விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கிறது.
____________________________
10.10.2009 நன்றி:ஆழி ஜனவரி 2010

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...