கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------
வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமம்
அதை தூக்கியபடி பறவையும்
அடைபட்டுக்கொண்டிருந்தது
இனி எல்லோரும் ஊமைகள்
நிலங்களுக்காகவே
கொடுமைக்காட்சிகளைபேசியபடி
நிறம் பூசியது பறவையின்
ஊனமடைந்த கைகள்
அந்தப்பறவை
இன்னும் வட்டமிட்டு
கோரத்தை சுமந்து
எங்கள் திசைகள்மீது
சிறகுகளை அடித்தது
அதன்குணம் வீடுகளைச்சூழ
விசம்பரப்பும்
பார்வையை ஆழவிட்டு
மரங்களை அசைத்துதின்றது
பறவைகளே வேட்டையாடின
அதுவும்
மனிதர்களை சப்பியபடி
வீடுகளை காவிக்கொண்டு
கிராமத்தை பிரளயம்நோக்கிக்கொண்டுபோனது
சுவரில் மோதி
அடிபட்டு விழுந்தது பறவையும் கிராமமும்
சுவரடியில்
கிராமம் சிதறிக்கொட்டியது
அந்தப்பறவைக்குப்பிறகு
கோழிகள்கூட குஞ்சுகளுக்கு
பருந்தாயின
குஞ்சுகளும் பருந்தாகின
சிறகுகளை மணந்து
உணர்ந்துகொள்ளமுடியவில்லை?
சிறகுகள் பயங்கரம்கலந்து புயலாகின
மீண்டும் அந்தப்பறவை
நிறம் பூசிவரும்
நினைவிலிருக்கிறது
அந்தப்பறவையின் பயங்கரமான சிறகுகளும்
அது நிலத்தில் விழுத்தும் வட்டமும்
கொடூரம் தாங்கியசொண்டும்
நெருங்கிச்சேர்கிறது
பறவையால் அழிக்கப்பட்ட கிராமம்
-----------------------------------------------------------------------
நன்றி-உயிர்எழுத்து,ஈழநாதம்
தீபச்செல்வன் Theepachelvan
20 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக