
கவிதை:தீபச்செல்வன்
______________________________________
குரலைத்திருகியவர்கள்
இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்
வார்த்தையை அடைத்தவர்கள்
நாவின்மீது
வாள்வீச வருகிறார்கள்
குழந்தைகளின்
புண்னகைச்சின்னங்களை
நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க
வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.
குரலைத்திருகியவர்கள்
இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்
வார்த்தையை அடைத்தவர்கள்
நாவின்மீது
வாள்வீச வருகிறார்கள்
குழந்தைகளின்
புண்னகைச்சின்னங்களை
நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க
வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.
புதைந்தவர்களின் வாக்கு மூலம்ங்கள்
தட்டிக்கழிக்கப்பட்டன
அமைதியைப்பற்றி
பிரசங்கம் செய்தவர்கள்
ஆயுதங்களை வழங்குகிறார்hகள்
அபிவிருத்தியைப்பற்றி
ஆய்வு நடத்தியவர்கள்
குண்டுகளை கையளிக்கிறார்கள்
பயங்கரவாதம் பற்றி
விளக்கமளித்தவர்கள்
அதிவேக விமானங்களை
பரிசளிக்கிறார்கள்.
தட்டிக்கழிக்கப்பட்டன
அமைதியைப்பற்றி
பிரசங்கம் செய்தவர்கள்
ஆயுதங்களை வழங்குகிறார்hகள்
அபிவிருத்தியைப்பற்றி
ஆய்வு நடத்தியவர்கள்
குண்டுகளை கையளிக்கிறார்கள்
பயங்கரவாதம் பற்றி
விளக்கமளித்தவர்கள்
அதிவேக விமானங்களை
பரிசளிக்கிறார்கள்.
சாகசங்களே பாராட்டப்படுகின்றன.
அவர்கள் யாரும்
எல்லைகளைப்பற்றி
ஏன் பேசாதிருக்கிறார்கள்?
எல்லை தான்டி வரும்
பயங்கரவாதத்தை எதிர்த்து
தீர்க்கப்புறப்படுபவர்கள்
சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு
ஏன் எல்லை தாண்டிவரவில்லை?
அவர்கள் யாரும்
எல்லைகளைப்பற்றி
ஏன் பேசாதிருக்கிறார்கள்?
எல்லை தான்டி வரும்
பயங்கரவாதத்தை எதிர்த்து
தீர்க்கப்புறப்படுபவர்கள்
சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு
ஏன் எல்லை தாண்டிவரவில்லை?
பாராமுகங்களை படைத்து கைமாறினர்.
கல்லறை நிறம்பிய
ஊர்களின்பாடலிடம்
எதுவரை செவிடராயிருப்பர்?
குருதி பாய்ந்து கொண்டிருக்கும்
நதியிடம் கால்நனைத்தும்
எதுவரை உணராதிருப்பர்
அந்தரப்படும் அப்பாவிகளின்
ஆன்மாக்களின் மொழியிடம்
எதுவரை ஊமராயிருப்பர்
கல்லறை நிறம்பிய
ஊர்களின்பாடலிடம்
எதுவரை செவிடராயிருப்பர்?
குருதி பாய்ந்து கொண்டிருக்கும்
நதியிடம் கால்நனைத்தும்
எதுவரை உணராதிருப்பர்
அந்தரப்படும் அப்பாவிகளின்
ஆன்மாக்களின் மொழியிடம்
எதுவரை ஊமராயிருப்பர்
தமது வர்ணவண்டிகளை
மிக வேகப்படுத்தினர்.
வயிறுகளில் வெறுமை முட்டிய
பசியின்கேள்விகளிடம்
இறுக மூடிய தெருக்களிடம்
சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்
சித்திரவதைக்கப்படும்
சிறைக்கூடங்களிடம்
பயணங்களை கைது செய்யும்
காவல் விதிகளிடம்
அடையாளத்தை அழிக்கும்
நிறைவேற்று அதிகாரத்திடம்
கண்ணாடிகளை அனிந்து
எதுவரை குருடராயிருப்பர்.
முகங்களை மாற்றி
வார்த்தைகளுக்கு நிறமணிந்து
மாளிகைகளுக்குள்
அடைந்து கொண்டனர்.
மிக வேகப்படுத்தினர்.
வயிறுகளில் வெறுமை முட்டிய
பசியின்கேள்விகளிடம்
இறுக மூடிய தெருக்களிடம்
சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்
சித்திரவதைக்கப்படும்
சிறைக்கூடங்களிடம்
பயணங்களை கைது செய்யும்
காவல் விதிகளிடம்
அடையாளத்தை அழிக்கும்
நிறைவேற்று அதிகாரத்திடம்
கண்ணாடிகளை அனிந்து
எதுவரை குருடராயிருப்பர்.
முகங்களை மாற்றி
வார்த்தைகளுக்கு நிறமணிந்து
மாளிகைகளுக்குள்
அடைந்து கொண்டனர்.
முகம் எரிந்துகொண்டிருக்கிறது.
_________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.தினக்குரல்.தின்னை
_________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.தினக்குரல்.தின்னை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக