Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 19 பிப்ரவரி, 2009

கடல் நுழையும் மணற் பதுங்குகுழி




ஒரு பக்கத்து வானத்தில்
பெருந்துயர் மிகு சொற்கள் 

எல்லாருக்குமான
பாவங்களைச் சுமக்கும்
சனங்களின் குருதி மிதக்கும்
துண்டுக் கடலில்
கறுப்பு இரவு திரிகிறது.

எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து
கழித்து ஓ.. என்ற
பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் 
வானம் தாறுமாறாய் கிழிந்தது.

சப்பாத்துகள் நெருக்கி கடலில்
தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில்
எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு 
மணல் போல உருந்துபோகிறது. 

எல்லாவற்றையும் இழந்து
ஒடிவரும் இரவு சிக்கியது
மிருகத்தின் வாயில்  

எறிகனை கடித்த
காயத்திலிருந்து கொட்டும் கனவுகளை
மிதிக்கிறது மண்ணை தின்னும் டாங்கிகள்
காயப்பட்ட வழியில் எங்கும் உப்புக் காற்று.

உன்னைச் சூழ்ந்திருக்கும்
கோரமான பற்களின் பசியில் கரைகிறது
உனக்காய் என்னிடமிருக்கிற பதுங்குகுழி.

எச்சரிக்கப்பட்ட துண்டுக் கடற்கரையில்
யாரும் அறியாதபடி மிக அமைதியாக
வந்து வெடிக்கிறது எறிகனை
குழம்பிக் கிடக்கிறது கடல் 

பின்னிரவை தொடரக் காத்திருக்கும்
மற்றைய எறிகனைகளில் 
அதிரும் அசைவற்ற கடற் கரை முழுவதும்
பாரமான குருதி.

உன்னிடமிருக்கும் பெருஞ்சொற்களில்
சிலதை கேட்டு முடித்தபோது
நாம் சேர்வதற்கான கனவு
நீயிருக்கும் மணற் பதுங்குகுழியின் மூலையில் 
உருந்துபோகும் மணலில் புதைந்தது. 

அம்மா!, அதிர்கின்றன
மணற் பதுங்குழியின் சொற்கள்.

18.02.2009. 

தீபச்செல்வன்



நீண்டநாட்களுக்குப் பிறகு தற்போது பொக்கனை கடற்கரையிலிருக்கும் அம்மா,  தங்கச்சியுடன் நான்கு நிமிடங்கள் பேசினேன். 

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...