Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 26 பிப்ரவரி, 2009

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி


தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது
நமது எல்லா வழிகளும்.
துப்பாக்கியின் நுனிகளில்
முகங்களும் எலும்புக்கூடுகளும்

எல்லாமே சட்டென தலைகீழாகிறது
நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு
சாம்பலை எதிராய் கிளம்புகிறது.

குருதியின் ஒருதுளி கடலில் மிதந்து
தப்பிச் செல்லுகிறது
வழியில் தற்கொலை செய்துகொள்ள
துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு
ஒரு மாபெரும் அரசனின்
ஒற்றை வாளில்
முழுச் சுவரும் வெட்டுண்டுபோயிற்று.

பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின்
கண்ணீரைத்தவிர
குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை
வானத்திற்கு மேலால் கடல்
இப்பொழுது கடைசிக் கெஞ்சல்
எதுவுமற்று வெளிக்கிறது துளி நிலம்.

முகத்தின் முன்னாலொரு ட்ராங்கியின் ஏவுகனை
குத்திக்கொண்டிருப்பதைபோலவே
எப்பொழுதும் துரத்துகிறது
தோல்வியின் பிறகான கூச்சல்

இன்றைக்கான தோல்வி பரிசளிக்கப்படும்
அலங்கரிக்கப்பட்ட மேடையில்
ஆக்கிரமிப்பின் சொற்கள்.

தேசம் முழுக்க புழுக்கிறது.

வெளியேறுகிற வழி
ஆக்கிரமிப்பின் வலையாக
கடல் எல்லாம் புதைக்கும் கிடங்காகிற்று.
கனவு
மற்றும் அதற்காய் சிந்திய குருதி
பறிக்கப்பட்ட
நிலத்தில் அழிக்கப்பட்டது.

வீழ்ந்த நகரம் தற்கொலை செய்துகொண்டது
கைப்பற்றப்பட்ட அதன் சுவர்கள்
உக்கத்தொடங்குகிற
எலும்புக்கூடாய் பிரிகையடைந்திற்று
சனங்களுடன் வெளியேற்றப்படுகின்றன
தற்கொலையுண்ட நகரத்தின் எலும்புக்கூடுகள்.

இனியொன்றும் இல்லை
துயரங்களைத்தவிர
சயனைட்டை அணைக்கிறது வாழ்வு.

வெளியேற வழியற்ற நிலம்
அந்தரித்து திரிகிறது

பதுங்குகுழிகளை அள்ளி ஏற்றுவதற்கு
கடலால் வருகிறது எண்ணெய் கொதிக்கிற கிணறு
பிள்ளைகளை கொன்று தாய்மார்களை
பிடித்துச் செல்லுகிறது சிங்கம்
தரப்பாலை சுற்றிக்கொண்டிருக்கிறது
பாம்பின் புகை.

தீபச்செல்வன்

(25.02.2009 வன்னி மக்களை வெளியேற்ற
அமரிக்காவும், இந்தியாவும் உதவுவதாக அறிவித்துள்ளது)

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...