______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
என் சப்பாட்டிற்குஅருகில்
என்பூனை காவலிருக்கிறது
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்
உடைகள் வேகமாக கழறுகின்றன.
வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை
நடமாடித்திரிபவர்களிடம்
உண்மை முகங்கள்
மருங்கியிருக்கின்றன
வீடு வரும்பொழுதெல்லாம்
அந்த மனிதர்களின்
பொய்முகங்கள் பின்தொடர்ந்து
துன்புறுத்துகின்றன.
பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்
எல்லா வலிகளும் அகலுகின்றன
நிம்மதியை கெடுக்கிற
ஒலிகளின் மத்தியில்
பூனையின் குரல்
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.
எங்கள் வீட்டில்
பூனைக்கும் நாய்க்கும் கூட
நல்லநெருக்கம் இருக்கிறது
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு
நெருக்கத்தின் வடிவமாய்
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
பூனையும் நாயும்
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.
வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு
எப்பொழுதும்
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது।
__________________________________
தீபச்செல்வன் Theepachelvan
21 மணிநேரம் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக