--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________
அந்தத் தென்னை மரத்தின்
தலை சிதறியிருந்தது
அதன் உடல் எல்லாம்
கிழிந்து
இரத்தம் கொட்டியது
துயரத்தை ஏற்றிய
கொடிபோல
அது நின்றுகொண்டிருந்தது.
வீதிகளில் பசுமை
வறண்டுபோய் கிடந்தது
கடைகிளில்
குடிப்பதற்கு குருதிறே
அதுவும் விற்பனையில்..
சதைகதைராசில் போட்டபடி
சிதறிய தலைகளுக்கு
விவாதிதித்தார்கள்.
பசுமை கவிதைகளை
விற்கவந்த நாடோடிகள்
முகங்களை உடைத்து
அழுகைகளை சம்பாதித்தனர்
சிரித்தபடி வந்தவர்கள்
அழுகை கொண்டே போனார்கள்.
அவர்கள் வந்து பார்த்தார்கள்.
எல்லோரும் இரைச்சலுக்காக
விழுந்து கிடந்தோம்
சிலர் சிழுந்த இடங்களிலேயே
கல்லறை எழும்பியது
உறவுகளும் மகிழ்வுகளும்;
தலைசிதறி மயானமாய் கிடந்தன.
என் இரண்டு வயது
பிள்ளையும்
பதுங்கி கிடந்த இடத்தில்
நடு கல்லாயிருந்தாள்
அவளை அணைத்தபடி
என் பசுமையும்
தலை சிதறி கிடந்தது
அதையும் அவர்கள்
பார்த்திருக்க வேண்டும்.
அந்த நெரிசலில்
அவர்கள் என் தொலைந்த
பசுமையை தேடித்தர இயலாது.
போகும் போது
பிணங்களை விலக்கியே
அவர்களால் போக முடிந்தது.
அவர்கள் வரும்போது
நான் நம்பினேன்
எல்லாம் பசுமையாய் இருக்குமென்று
இருந்தாலம்
அவர்கள் நெடுகபார்ப்பார்கள்
போன பிறகும் பார்ப்பார்கள்.
தலைசிதறித்தெரியும் - அந்த
தென்னைமரத்தின் வழியே
தேடப்படும் எங்கள் பசுமையை
-----------------------------------------
09.11.2006 அன்று வாகரையில் பாடசலை-அகதிமுகாம் மீது இலங்கை இராணுவம் நடத்திய எறிகனைத்தாக்குதலில் 50க்கு மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
-------------------------------------
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக