_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
உனக்கும் எனக்குமான
சமன்பாடுகளில்
சரிவு வந்துவிட்டது
அசாதாரணங்களின்
அடம்பிடிப்புகளால்.
உன்னை நானும்
என்னை நீயும்
அடியோடு
மறந்துகொள்ள
முயற்சிப்போம்
எங்களுக்கான
மரணங்கள் வரை.
எங்களுக்கான
இறுகிய உறவு
எதையோ
அச்சுறுத்தல் செய்யுமெனில்
அதை அறுத்துவிடல்
நமக்கே நல்லது.
உன்தோள்களில்
நான் கைபோட்டுக்கொண்டதும்
உன்னால்
என் கண்ணீர்
துடைக்கப்பட்டதும்
ஒரு துரதிஸ்டக்காரனாய்
எனக்குள்
நானே கண்ட
கனவாய்போகட்டும்.
அதெப்படி என்னை
சிலுவையில்
அறையப்போகிறார்கள்
என்றதும்
உன்னால் என்னை
உதறமுடிந்தது
நான் இயலாதிருக்க.
எங்களுக்குள்
நிகழ்ந்து முடிந்த
இந்த
இராப்போசனத்தை மட்டும்
அடிக்கடி நினைத்துப்பார்
நாம் நமக்குள் இருப்போம்.
-----------------------------------------------------
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக