______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
நீ எனக்காக
ஓருநல்ல வீதி செய்துதந்திருக்கிறாய்
நீ தெரிவு செய்து அனிந்திருக்கும்
நிம்மதி தருகிற
கௌரவம் தருகிற
அங்கிகளையே நானும் அணிந்து
நீ செய்து தந்த வீதியில்
உன்னோடு வருகிறேன்.
மிகுந்த ஆவல்கள்
ஊட்டப்பட்ட
நமது தோட்டம் இன்னும்
பசுமை துளிர்த்து வருகிறது
நீ தேர்வு செய்த
பாடல்களை பாடியபடி
தோட்டத்தை அடையலாம்.
முதலில் தோட்டத்தில
புசிக்கத்தகாது விலக்கப்பட்ட
கனிகளை
தேடிஅழிப்போம்
நமது சந்ததியின்
அமைதியான வாழ்விற்காய்
ஆரொக்கியம் தரும் நல்ல
கனிகளை உற்பத்தி செய்வோம்.
நமது நாகரீகங்கள்
அழிந்துவிட்டது
என்று நமது
முகங்கள் மீது
கரிபூச சாத்தான்கள்
படையெடுக்கின்றன.
எல்லோராலும்
புறக்கனிக்கப்பட்ட
இரவொன்றில்
மிக அதிகதூரத்தில்
மங்கி எரியும் விளக்கைச்சுற்றி
நமது புத்தகம்
மிகுந்த பற்றுடன்
வாசிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு இராத்திரியிலும்
கூடுகளை அடைந்தபிறகு
வீதியின் பாடலுக்காக
தவமிருக்கும் கால்கள்
உதிர்ந்தும் கிடக்கின்றன
தோட்டத்தின் பசுமைக்காக
காத்திருக்கும் கண்கள்
விழித்தும் கிடக்கின்றன.
நமக்காக எழுதப்பட்ட
புனித புத்தகத்தை
வாசித்தபடி
பயணங்களில்
மிகுந்த அக்கறை செலுத்துவோம்.
உன்னால் திட்டமிடப்பட்ட
வீதிகளின்
இனிய வாசனையுடன்
நீ மூட்டும்
அழகியதோட்டத்தின்
இதமான பசுமையில்
புதியவாழ்வு
பரிசளிக்கப்பட இருக்கிறது
அப்பொழுது
நீ எடுத்து வரும் சூரியவிளக்குகளில்
நமது புத்தகம் வாசிக்கப்படும்
நல்ல கனிகளை புசித்தபடி.
--------------------------------------------------------------
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக