_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________
பூமியின் இருட்டில்
ஒரு துளிவெளிச்சம்
எஞ்சிக்கிடக்கிறது
நீயும் நானும்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் ஒரு துளி அது.
இரவுக்குள்
ஒரு சூரியனைப் போல
பிரகாசிக்கிறது
அந்த துளியில்
நமது வாழ்வு
துர்ந்து கிடக்கிறது.
நமது நெருக்கங்களும்
வார்த்தைகளும்
கலந்து கிடக்கின்றன.
நாம் நமது
மகிழ்ச்சின் துளியை
தியாகம் செய்ய துணிவோம்.
நமது பிரிவு பூசிய
அந்த துளியில்
வெளிச்சம்
எல்லோருக்குமாக
புறப்படுகிறது.
ஏப்பொழுதும் போல
நாம் இரவாக இருப்போம்
நமது துளியில்
எப்படியோ
சூரியன் கூடு கட்டியிருக்கிறது.
விளக்குகளுக்காக
மனிதர்கள்
தவமிருக்கிறபொழுது
இருட்டில் விளக்குகள்
தொலைக்கப்படுகிற பொழுது
நாம் நமது
முத்தத்தின் துளியில்
மண்டிக்கிடர்ந்து
பிரகாசிப்போம்.
--------------------------------------------
காணமல் போன பூனைக்குட்டி
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக